Sunday, January 24, 2010

சோதிடம் பற்றி

முனைவர் இராமாத்தாள் அவர்களின் தலைமையிலான மகளிர் ஆணையம் மிகவும் தேவையான _ அவசியமான ஆய்வு ஒன்றினை நடத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் கடந்த இரு மாதங்களாக அந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. எதன் அடிப்-படையில் வாழ்க்கைத் துணையைப் பெண்கள் தேர்வு செய்ய விரும்புகின்றனர் என்னும் ஆய்வுதான் அது.

97 விழுக்காடு பெண்கள் தங்களுக்கு வாய்க்கவிருக்கும் துணைவரின் கல்வி, வேலை வாய்ப்பு, குடும்பப் பின்னணி இவற்றோடு ஜாதகப் பொருத்தம் தேவையில்லையென்றும், அதே நேரத்தில் மருத்துவப் பரிசோதனை இரு தரப்-பிலும் தேவையென்றும் தெளிவாகக் குறிப்-பிட்டுள்ளனர்.

நம் நாட்டுக் கல்வி என்பது பெரும்பாலும் வயிற்றுப் பிழைப்புக்கான லைசென்ஸ்தான்; அது பகுத்தறிவையோ, அறிவியல் மனப்பான்மை-யையோ வளர்க்கக் கூடியது அல்லவென்றாலும், அதனையும் மீறிக் கல்லூரி மாணவிகள் பெரும்பாலும் ஜாதகப் பொருத்தம் தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்திருப்பது நம்பிக்கை-யளிப்பதாக உள்ளது. 2.4 விழுக்காடு பெண்களே ஜாதகப் பொருத்தம் தேவையென்று கூறி-யுள்ளனராம்.

ஜாதகப் பொருத்தம் பார்த்து, நல்ல நாள், நேரம் பார்த்துத் திருமணம் செய்து கொள்வோர்தான் சுகமாக வாழ்கிறார்கள்; ஆயுள் கெட்டியாக வாழுகிறார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது.

விவாகரத்துக் கோரி குடும்ப நீதிமன்றங்களில் மனு போடுவார்கள் எல்லாம் ஜாதகப் பொருத்தம் பார்க்காதவர்கள்தான் என்று சொல்ல முடியுமா?

ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்துகொள்வோர் வாழ்க்கை தோல்வி கண்டுவிட்டது; அற்ப ஆயுளில் மாண்டு விட்டார்கள் என்றுதான் சொல்ல முடியுமா?

ஜாதகம் என்பதே பிறந்த நேரத்தை வைத்துக் கணிக்கப்படுவதுதானே!எது பிறந்த நேரம்? குழந்தை தலையை நீட்டிய நேரமா? அல்லது பூமியில் விழுந்த நேரமா? நர்சு தமது கடிகாரத்தைப் பார்த்த நேரமா? அல்லது வெளியில் வந்து உறவினர்களிடம் சொல்லும் நேரமா? எந்த நேரம் என்று தந்தை பெரியார் கேட்டாரே, இதுவரை பதில் உண்டா?

ஒரு குழந்தை பிறந்த அதே நேரத்தில் இன்னொரு நாய்க்குட்டி பிறந்திருந்தால் இரண்டும் ஒரே குணத்தோடு, ஆயுளோடு இருக்குமா?

நாய்க்குட்டி பிறந்த நேரத்தையும், மணமகன் பிறந்த நேரத்தையும் கொடுத்து சோதிடம் பார்க்கச் சொன்னால், எந்த சோதிடனாவது அது நாய்க்குட்டிக்குரியது என்று சோதிடம் சொல்லுவானா?

60 ஆண்டுகளுக்குமுன் நம் மக்களின் சராசரி வயது 30 தானே! இப்பொழுது ஆண்களின் சராசரி வயது 63.3 ஆகவும், பெண்களின் சராசரி வயது 66.3 ஆகவும் உயர்ந்துள்ளதே! இதற்குக் காரணம் என்ன?

மருத்துவ வளர்ச்சி ரீதியாகப் பதில் சொல்ல முடியுமே தவிர, சோதிட ரீதியாகப் பதில் சொல்ல முடியுமா?

இன்னும் நவக்கிரகங்களை (அதாவது ஒன்பது கிரகங்களை)ப்பற்றி தானே பேசிக் கொண்டு இருக்கிறார்கள்?1781 இல் யுரேனசும், 1846 இல் நெப்டியூனும் 1930 இல் புளூட்டோவும் கண்டுபிடிக்கப்-பட்-டனவே _ இவற்றிற்குச் சோதிடப் பலன் உண்டா?இதில் வேடிக்கை என்னவென்றால் சூரியன் என்பது நட்சத்திரம். ஆனால், சோதிடத்தில் அதனைக் கிரகத்தின் பட்டியலில்தானே சேர்த்துள்ளனர்? நவக்கிரகத்தில் பூமிக்கு இடம் இல்லை; ஆனால், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டு.

படித்தவர்கள் இதுபற்றியெல்லாம் சிந்திக்க-வேண்டும்.கல்லூரி மாணவிகள் பெரும்பாலோர் சோதிடத்தைப் புறந்தள்ளிக் கருத்துக் கூறியது வரவேற்கத்தக்கது. தேவையான ஓர் ஆய்வை நடத்திய மகளிர் ஆணையத்துக்கும் நமது பாராட்டுகள்.
நன்றி- விடுதலை

Friday, July 17, 2009

சோதிடந்தனை இகழ் !

அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் வளர்க்க வேண்டும் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் பார்வை. அனைத்து அறிவியலாளர்களும் ஜோதிடத்தின் விஞ்ஞானப் பூர்வ நம்பகத் தன்மை குறித்து எம்மிடம் கேட்டால் அதைக் கண்டிப்பாக மறுப்போம் என்கின்றனர்.

உலகப் புகழ் பெற்ற இந்திய அறிவியலாளர்கள் பலரும், அறிவியல் இயக்கங்களும், சமூக விழிப்புணர்வுக் குழுமங்களும், பகுத்தறிவு இயக்கமும், வானவியல் ஆய்வாளர்களும், சிந்தனையாளர்களும், தத்துவ ஆசிரியர்கள் படைப்பாளிகள் சோதிடம் குறித்த கடுமையான ஆராய்ச்சி செய்தவர்கள் ஆகிய யாவரும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும் சோதிடப் பாடம் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்புக்கு ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் கல்வி நிறுவனங்கள் யாவும் அண்டத்தை அளக்குமளவிலான முற்போக்குப் பயணம் மேற்கொள்கிற இக்காலத்தில் நம் நாட்டில் மருத்துவம், குடிநீர், அடிப்படைக் கல்விக்கான அடைவுகள் நோக்கிய பயணம் வேகமாக்கப்பட வேண்டிய நிலையில் இருக்க, வேலையின்மை, திறனுக்கு மதிப்பின்மை ஆகிய விரக்திகளால் தன்னம்பிக்கை குறைந்து தற்கொலைச் சிந்தனையின் சின்னங்களாக உலவுகிற இன்றைய, பெரும்பாலான இளைஞர்களுக்கு தன் முயற்சி கூடும் தொழில் முனைவோர், தொழில் வளர்ச்சிகள் நலிந்து கொண்டிருக்க படித்தவர்கள் நிலையிதுவெனில் தன்உழைப்பு முழுவதையும் தன் பாமரத்தன்மையால், மூட நம்பிக்கைகளால் பழமை வாதங்களால் சூடமாய் சாம்பிராணியாய் பலர் எதிர்த்துக் கொண்டிருக்க இதற்கு மாற்றான அறிவியல் உணர்வு வளர்க்கப்பட வேண்டிய காலம் இது.

தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றத்திற்கான, நேர நிர்வாகம் தொடர்பான பயிற்சிகள் கால, தேச, பிரபஞ்ச வர்த்தமானங்கள் குறித்த நமது மரபு வழியிலான வானவியல் அறிவு, சுய சிந்தனையின் வழி தன்னை தன் ஆன்மச் சூழலை உணரவைக்கிற உளவியல் மெய்ப்பிப்புகள் நிறைந்த பாடல்கள் வரவேற்கத்தக்கது.

தந்தை பெரியார் நூற்றாண்டு கடந்த இச் சூழலில் இப்பகுத்தறிவு யுகத்தில், பிழைப்பு வாதத்திற்காக கணிப்பொறிகளும் ஜாதகம் பார்க்கத் தொடங்கி விட்டன. மக்களது சுய சிந்தனையை, திட்டமிடலை மழுங்க வைக்க காலையிலிருந்தே தொலைக்காட்சிகள் அவையவை ஆளுக்கொரு திசையையும் வாய்க்கு வந்த திசையையும் வாய்க்கு எந்த எண்களையும் ராசியோடு வாரி வழங்குகின்றன.

ஜோசியம் கணிக்கிற நபர் ஒருவர் நாளேடொன்றிற்கு ஒரு வாரம் ராசிபலன் எழுதி அனுப்ப மறந்தால் அந்த ஏட்டின் ஆசிரியர் பழைய வாரப் பத்திரிகைகளை எடுத்து அவசரத்திற்கு வெளியிட அதற்கும் பல வாழ்த்து மடல்கள் வந்ததாகச் சொன்ன வரலாறுகள் நாம் அறிந்ததே.

இப்படியாக சோதிடம் என்பதே, கற்பனை, பொய் என்பதற்கான அறிவியல் வழியிலான சான்றுகளைச் சோதிடர்களின் கூற்றுகளை நடை முறைகளைக் கொண்டே நிறுவ முடியும்.

(எ.கா.) சோதிட முறைப்படி கோள்கள் பன்னிரண்டு. ஆனால் உண்மையில் கோள்கள் ஒன்பது. பிறந்த நேரம் கோள்களின் அமைப்பு இவை யாவும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வாழ்க்கை மாறுபாடுகளை ஏற்படுத்தும் எனச் சொல்லி அப்பட்டமாக ஏமாற்றுவது ஊழ்க்கோட்பாடு (விதி) என்பதான பெயரில் சிந்திக்க மறுக்கிற சமூகத்தை உருவாக்கி விடும். அவலத்திற்குரிய செய்தி யாதெனில் குழந்தை பிறப்பு கூட தற்போது நல்லநேரம், காலம் என்பதாகக் கூறி இயல்பாகப் பிறக்கும் நிலையிலும் கூறி இயல்பாகப் பிறக்கும் நிலையிலும் கூட அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறக்கச் செய்வதை உலகம் காண்கிறது. இப்பேரண்டத்தின் இயக்கம், கோள் நிலை மாறுபாடுகள் இவற்றால் புவியல் உள்ள ஒட்டு மொத்த உயிரினங்களுக்கும் ஏதேனும் விளைவுகள் ஏற்படுமே தவிர (சான்று: காஸ்மிக் கதிர்கள்) ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இன்னின்ன விளைவுகள் ஏற்படும் என்பது உண்மையல்ல என உருசிய நாட்டு அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

உலகத்தை உள்ளங்கையில் அடக்குகிற தகவல் தொழில் நுட்ப ஊழிக்காலத்தில் உன் உள்ளங்கை ரேகையில்தான் வாழ்க்கையே இருக்கிறது என்று சொல்லுகிற சோதிடத்தை அண்மையில் நேபாள மன்னர் குடும்பக் கொலைகள் பொய்யென்று காட்டின.

முன்பு கிருஷ்ணதேவராயரின் வாழ்நாள் இவ்வளவு என்று (சோதிடம்) கூறிய ஆருடனுக்கு நிலமும் பொன்னும் கொடுக்க, சொன்னவனை அழைத்து, உன் ஆயுள் காலம் எவ்வளவு? எனக் கேட்டு அவனை அக்கணமே வெட்டிச் சாய்த்து அச்சோதிடம் பொய்யென உணர்த்திய தெனாலிராமன் கதை நிலவிய சமூகம் இது.

அண்ணனுக்கு அரசு தந்து, அன்றே துறவறம் பூண்டு சோதிடத்தைப் பொய்ப்பித்த ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்று சொல்லி ஊழுக்குப் புது விளக்கம் தந்த சிலம்பாசான் இளங்கோவடிகள்.

இப்படியான வரலாறு படித்த இளைஞர்களை எதிர் காலச் சோதிடர்களே வாருங்கள்! என கல்வி நிறுவனங்கள் அழைக்கத் தொடங்கியிருப்பது கவலைக்குரியது. ஆன்மீக ரீதியாகப் பார்ப்பினும் சிறுதெய்வ வழிபாடாயினும் பெருந்தெய்வ வழிபாடாயினும் இறையுணர்வொன்றே தன்னம்பிக்கைக்கு ஊன்று கோலாகவும் உளவியல் ரீதியான பாதுகாப்பு உணர்வையும் நல்குமென்பதை, ஞாயிறு திங்கள் செவ்வாய் . சனி பாம்பிரண்டுடனே... ஆசறு நல்ல நல்ல அவை நல்ல அடியாரவர்க்கு மிகவே என்று திருமுறை சுட்டுமாப்போல அவரவர் இறை என்ற உயர் சக்தியோடு, சக்தியை நினைந்து இயங்கும்போது இடையில், அண்மைக் காலத்தில் மிகவும் அச்சமூட்டு வதாகவும், வணிகம் போலவும் பெருகிவிட்ட இந்த நவகிரக வழிபாடு அது குறித்த பரிகாரங்கள் என்பவை யாருடைய நலனுக்கானவை என்பது சிந்திக்கத் தக்கதாகின்றது.

இயல்பான அறிவுடைய ஒரு மனிதராய் அறிவியலாளியாய் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே. ராஜு அவர்கள், ஒரு விஞ்ஞான ஆசிரியர் என்ற முறையில் எனது கவலை இதுதான். ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒரு குறிப்பிட்ட முறையில் சேர்ந்தால்தான் தண்ணீர் ஆகும் என்றால் அதைச் சோதித்துப் பார்க்கிற யாருக்கும் ஒரே மாதிரியான விடை கிடைக்கும். ஆனால் நூறு சோதிடர்கள் ஒரே ஜாதகத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கணிக்கிற கூத்துதான் நடக்கிறது. இதில் யாருடைய கணிப்பைக் கொண்டு போய் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு போதிக்கும்? நூறு கோடி மக்களுக்கும் பல்வேறு நம்பிக்கைகள் உண்டு. இவையெல்லாம் பாடமாக வைப்பது அவசியம்தானா? என்று வினா எழுப்புகிறார்.

தங்களிடம் வருபவர்களின் மனநிலையறிந்து அதற்கேற்ப ஆறுதலும், அவர்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியையும் மன நிறைவையும் சொல் ஜாலத்தால் ஏற்படுத்தி அவர்களது இயலாமையை முதலாக்கி பரிகாரம் ஏதாவது சொல்லி இயன்றவரை பணம் பறிப்பது எமது தொழில் ரகசியம் என்பது சோதிடர்களே ஒத்துக் கொள்கிற ஒன்று. ஒன்றுமற்ற இதனை பாடமாக்க, அதை மாணவர்கள் படிக்க, நாளைக்கு அவர்களும் கட்டாயம் அங்கீகாரம் பெற்ற நவீனப் புரோகிதர்களாகத் தான் அலையவேண்டி வரும். இசுலாமிய, கிறித்துவ இதர சமயத்தார் பெற்றிருக்காத ஜாதகம், ராசி, நட்சத்திரம் இவை பற்றிய இப்படிப்பினை எவ்வளவோ அடிப்படை அறிவியல் துறைகள் விரிவுபடுத்த வேண்டிய சூழலில் கொணர்வது தொழில் நுட்ப யுகத்திற்கான அடையாளமா? என அய்யுறவேண்டி இருக்கிறது. இதைப் படித்துவிட்டு நாளைக்கு ஓர் ஆசிரியராக வரக்கூடியவர், தன் மாணவனின் ஜாதகம் பார்த்து நீ தேருவாய், நீ தேரமாட்டாய் என்று கைராசி பார்க்கக் கூடும்.

மாவட்ட ஆட்சியாளராய் வரக்கூடியவர் இங்கே இருக்கும் குடிநீர்ப் பிரச்சினைக்கு வாஸ்து சாஸ்திரமே காரணம். எனவே யாகம் வளருங்கள் என்று சொல்லக் கூடும். மேலும் இது இன்று வளர்ந்து வரும் பெண்ணியத்திற்கு முரணானது. ஏற்கெனவே தோஷம், ஜாதகப் பொருத்தம் இப்படியானவற்றால் முதிர் கன்னிகள் பெருக, இதன் மூலம் மீண்டும் பெண்ணடிமைத்தனத்திற்கே இந்த ஆணாதிக்க சமூகம் வழிகோலும். அன்றே தன்னோர் செய்யும் புரோகிதம் என் தொழிலல்ல எமக்குத் தொழில் கவிதை என்று சொன்ன நம் தோழன் பாரதியின் அக்கினிக் குஞ்சுகளாய் அறிவுத் திறன் கொண்டு மடமையைக் கொளுத்துவோம்.

--------------------நன்றி: தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை ஆசிரியராகக் கொண்ட "அறிக அறிவியல்", ஜூலை 2009 இதழிலிருந்து...

Tuesday, April 21, 2009

கிரகங்களின் சக்திதான் மனித வாழ்வை நிர்ணயிக்கிறதா?

கிரகங்களின் சக்திதான் மனித வாழ்வை நிர்ணயிக்கின்றன என்கிறது சோதிடம்! அதை மறுக்கிறார்கள் கீழ்க்கண்ட விஞ்ஞானிகள்:

1. தில்லி பல்கலைக்கழக விஞ்ஞானி

2. தமிழ்நாடு வானவியல் விஞ்ஞானி தேவதாஸ்

3. சன்தொலைக்காட்சியில் உரையாடிய விஞ்ஞானி

பூமி தன்னைத்தானே 18.5 கி.மீ வேகத்தில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது.

சூரியனிலிருந்து பூமி 15 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது. பூமி வினாடிக்கு 29 கி.மீ வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரிய ஒளி பூமிக்கு வந்து சேர 7ஙூ நிமிடம் ஆகிறது. பூமி ஒரு உயிர்க்கிரகம்! இங்கு தான் உயிரினங்களும் தாவரங்களும், மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான உயிர்க் காற்று (பிராண வாயு), நீர், மிதமான வெப்பம் இருக்கின்றன.

கடுங்குளிராலும், அதிக வெப்பத்தாலும் மற்ற கிரகங்கள் வறண்டு கிடக்கின்றன. இந்த வறண்டு போன கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சக்தி உண்டு என்றும் அந்த சக்திதான் பூமியிலுள்ள மனிதர்களின் வாழ்வை நிர்ணயிக்கிறதென்றும் கூறும் சோதிடர்கள்,உயிர்த்துடிப்பான பூமி கிரகத்திற்கு என்ன சக்தி உள்ளது என்று சொன்னதுண்டா?

வியாழன், சனி இரண்டு கிரகங்களும் பூமியை விடப் பெரிய கிரங்கள்! மற்ற புதன், வெள்ளி, செவ்வாய்க் கிரகங்கள் பூமியை விடச் சிறிய கிரகங்களே! பூமிக்குப் பக்கத் திலே 4 கோடி கி.மீ. தூரத்திலுள்ள சிறிய கிரகம் வெள்ளிக்கிரகத்திற்கோ 9 கோடி கி.மீ. தூரத்திலேயுள்ள செவ்வாய்க் கிரகத்திற்கோ பூமியால் எந்தக் காலத்திலாவது பாதிப்பு ஏற்பட்டதென்று கூற முடியுமா?

பூமியால், பக்கத்திலுள்ள கிரகங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதபோது அந்தக் கிரகங்களால் பூமிக்கும், பூமியில் உள்ள மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதா? உலக விஞ்ஞானிகள் மற்ற கிரகங்களுக்கு அத்தகைய சக்தியில்லை என்கிறார்கள். சோதிடர்கள் கிரகங்களுக்கு சக்தி உண்டு என்று பொய் கூறுகிறார்கள்! ஏமாளிகள் இங்குதானே இருக்கிறார்கள்.

கிரகங்களுக்கு சக்தி உண்டா?

17.4.2005இல் தில்லி பல்கலைக்கழக விஞ்ஞானி அளித்த பேட்டியில், ஈர்ப்புவிசை தவிர கிரகங்களுக்கு வேறு எந்த சக்தியும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

17.09.2005இல் சன் தொலைக்காட்சியில் பேசிய தமிழ்நாடு வானவியல் அறிவியல் கழக விஞ்ஞானி தேவதாஸ் கிரகங்களுக்கு ஈர்ப்புவிசை தவிர வேறு எதுவும் கிடையாது என்று விளக்கமளித்தார்.

7.08.2005-இல் சன் தொலைக்காட்சியில் மாலனுடன் உரையாடிய விஞ்ஞானி அறியாமையால்தான் கிரகங்களால் மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமென்று நம்புகின்றனர். கிரகங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை என்று விளக்கினார்.

இதே கருத்துதான் அறிவியல் விஞ்ஞானிகளின் கருத்தும் ஆகுமென்று தில்லி பல்கலைக்கழக விஞ்ஞானி கூறியிருக்கிறார். உலக விஞ்ஞானிகளின் கருத்தும் அதுவே தான்!

விஞ்ஞானிகளின் கருத்தையும், ஆய்வு களையும் ஏற்றுக் கொள்ளாமல், எந்த அறிவியல்அறிவும் இல்லாத சோதிடர்கள் கூறுவதைக் கேட்டு கிரகங்களுக்கு ஏதோ சக்திஇருப்பதாக நம்புவது விஞ்ஞான உல கத்திலிருந்து விலகிச்செல்வதாக ஆகாதா?

உண்மை இருக்குமானால் நம்புங்கள். சொல்லுகின்றவரைப் பொறுத்துதான் எதையும் நம்ப வேண்டும்! தமிழர்கள் முன்னேறிவிடக்கூடாது, கல்வி கற்று உயர்ந்திடக் கூடாது என்ற மனப்பான்மை யுடன் வாழ்ந்து வரும் பார்ப்பனர்கள் கூறுவதை நம்பலாமா? தமிழர்கள் தற்குறி களாகவே இருந்திட வேண்டும் என்பதற் காகவே பார்ப்பனர்களால் அறிவுக்குப் பொருந்தாத சோதிடம் திணிக்கப்பட்டிருக் கிறது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சில கருவிகளை விண்வெளி ஆய்வுக்கூடத்தில் இணைப்பதற்கு பூமியிலிருந்து 350 கிலோ மீட்டர்உயரத்தில் வானவெளியில் மிதந்தபடி இணைப்புப் பணியை மேற்கொண்டதை தொலைக் காட்சியில் அனைவரும் பார்த்திருக்கக் கூடும்! பூமியின் ஈர்ப்பு விசை 350 கி.மீ. உயரத்தில் வலுவிழந்து இருப்பதால் மனிதர் கள் கீழே பூமியில் விழுந்து விடாமல் வான வெளியில் மிதக்கிறார்கள்.

பூமியைப் போலவே மற்ற கிரகங் களுக்கும் ஈர்ப்பு விசை மட்டுமே உண்டு! அதுவும் சில குறிப்பிட்ட தூரத்திற்கே! பூமியை எட்டுகிற அளவிற்கோ அல்லது பூமியை தாக்குகிற அளவிற்கோ எந்த சக்தியும் இல்லை என்பதை இதன் மூலம் அறிய முடியும்!

அறிவியலா? - சோதிடமா?

கிரகங்களுக்கு வேறு ஆற்றல் இல்லை என்பதை விஞ்ஞானிகள் கூறியுள்ள தெளிவான ஆதாரப்பூர்வமான விளக்கத்திற்குப் பிறகும், கிரகங்களின் சக்தி மனித வாழ்வின் எல்லா அம்சங்களையும் நிர்ணயிக்கின்றன என்று சோதிடர்கள் கூறுவதை நம்பலாமா? எந்த ஆய்வின்படி, ஆதாரத்தின்படி சோதிடர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்?

அறிவியல் விஞ்ஞானிகளின் ஆய்வுக் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், வேத அய்தீகக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட தவறான கணிப்பைக் கொண்ட பஞ்சாங்கத்தை வைத்துக் கூறப்படும் சோதி டத்தை இன்னும் நம்பிக் கொண்டிருப் பவர்களுக்கு சிந்திக்கும் திறனே இல்லை என்று தான் கூற வேண்டும்.!

பூமியிலிருந்து கிரகங்களின் சராசரி தூரம்

புதன் கிரகம் 9 கோடி 20 இலட்சம் கி.மீ.

வெள்ளிக் கிரகம் 4 கோடி 20 இலட்சம் கி.மீ.

செவ்வாய்க் கிரகம் 7 கோடி 70 இலட்சம் கி.மீ

வியாழன் (குருகிரகம்) 62 கோடி 80 இலட்சம் கி.மீ

சனிக் கிரகம் 127 கோடி 70 இலட்சம் கி.மீ

யுரேனஸ் கிரகம் 272 கோடி 20 இலட்சம் கி.மீ

நெப்டியூன் கிரகம் 435 கோடி 30 இலட்சம் கி.மீ

புளூட்டோ கிரகம் 575 கோடி 90 இலட்சம் கி.மீ

பூமி நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும் போது 15 கோடியே 21 இலட்சம் கி.மீ. தூரத்திலும், சூரியனை நெருங்கி வரும் போது 14 கோடியே 71 இலட்சம் கி.மீ. தூரத்திலும் இருக்கும். அது போன்றே மற்ற கிரகங்களும் சூரியனை நெருங்கி வரும் போதும், சூரியனிலிருந்து தூரத்தில் இருக் கும்போதும் கிரகங்களின் தூரம் சிறிது மாறுபடும்!

எந்தக் கிரகத்தின் ஈர்ப்பு விசையும் பூமியை எட்டவே எட்டாது! வேறு சக்தி கிரகங்களுக்கு இருப்பதாக விஞ்ஞானம் கூறவில்லை! விஞ்ஞானத்தை நம்புங்கள்!


---------------நன்றி:- 17-4-2009 "விடுதலை" யிலிருந்து

Wednesday, May 14, 2008

கிழித்து குப்பையில் எறியப்பட்ட ஜாதகங்கள்!

கிழித்து குப்பையில் எறியப்பட்ட ஜாதகங்கள்!



இளைஞர் இயக்கம் என்ற அமைப்பு 2007இல் உருவாக்கப்பட்டது। இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 51 ஏ(எச்)இல் அறிவிக்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளான அறிவியல் உணர்வு, மனித நேயம், ஆய்வு மனப்பான்மை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதுதான் இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும்। அறிவியல் உணர்வை இளைஞர்களிடம் பரப்பும் நோக்கோடு, 2008ஆம் ஆண்டு பொங்கல் நாளை ஒட்டி, ‘ஜாதகம் விளைவிக்கும் சமுதாயத் தீமைகள்’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள கல்லூரி மாணவர்களைத் தொடர்பு கொண்டு இளைஞர் இயக்கம் கட்டுரைப் போட்டியை நடத்தியது।

22 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 939 மாணவ, மாணவியர் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றனர்। இவர்களில் ஆண்கள் 177 பேர், பெண்கள் 762 பேர்। இம்மாணவர்கள் 23।02।2008 சனிக்கிழமை அன்று சென்னை தியாகராயர் அரங்கில் நடந்த ‘ஜாதக ஒழிப்புநாள்’ நிகழ்விற்கும் அழைக்கப்பட்டார்கள்। காலை 10 மணிக்குத் தொடங்கிய இக்கருத்தரங்க நிகழ்வில் இளைஞர் இயக்கத்தின் அமைப்பாளர் மருத்துவர்।நா।எழிலன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்। வரவேற்புரையில், குழந்தை பிறக்கும் நேரத்தைக்கூட சரியான முறையில் கணக்கிடுவதில் உள்ள மருத்துவம் சார்ந்த சிக்கல்களை விளக்கினார்। காலம், நேரம் பார்த்து இயற்கையாக குழந்தை பிறப்பதற்கு முன்பே அறுவை சிகிச்சையின் வழியாக குழந்தையை வெளிக்கொண்டுவரும் கொடூர செயல் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டி, இது மனித உரிமை மீறல் என்றும் குறிப்பிட்டார். இரைப்பைக்கல் அறுவை சிகிச்சையைக் கால, நேரம் பார்த்து தள்ளிப்போட்டதால் அண்மையில் ஒருவர் குடற்பை வெடித்து இறந்ததையும் சுட்டிக்காட்டி காலம், நேரம், ஜாதகக்கணிப்பு ஆகியவை மனித சமூகத்திற்கு ஏற்படுத்தும் கொடுமைகளை விவரித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரு।வீரபாண்டியன் அவர்கள், அறிவியல் அணுகுமுறையைக் கடைப்பிடிக்காததன் விளைவுகளைச் சுட்டிக்காட்டி சேது சமுத்திரத் திட்டம் போன்ற மக்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கக் கூடிய திட்டடங்களை மதத்தின் பெயரால் தடுக்கும் போக்கினை எடுத்துக்காட்டினார்।।மாநிலத் திட்டக்குழுவின் துணைத்தலைவர் பேராசிரியர் மு।நாகநாதன் அவர்கள் உரையாற்றும் போது, ஜாதகத்தை நம்பும் இந்திய மக்கள் பற்றி வானவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாகிங் அவர்கள் குறிப்பிட்டக் கருத்தைச் சுட்டிக்காட்டினார்। குறிப்பாக, கண்ணுக்குப் புலப்படாத அறிவியல் கருத்துகளுக்கு உட்படாத, ஜாதகத்தை நம்பி வாழும் மக்கள் இன்றும் இந்தியாவில் இருக்கின்றார்களே என்று ஸ்டீபன் ஹாகிங் கூறிய கருத்தைக் குறிப்பிட்டு, ஜாதகம் எவ்வாறு மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்துகிறது என்பதை விளக்கினார்। பெங்களூரில் இருந்து பல ஆண்டுகளாக வெளிவந்த ஒரு சோதிட பத்திரிக்கை சென்ற நவம்பர் இதழில், பெனாசிர் புட்டோ தான் பாகிஸ்தானின் பிரதமராக வருவார் என்று கணித்தது। ஆனால் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டார். எல்லாரைப் பற்றியும் கணித்த இந்த சோதிட இதழ், 2007 நவம்பர் திங்களோடு தனது பயணத்தை முடித்துக்கொண்டது. தங்களுடைய சோதிட இதழ் நின்று போகப் போவதையே கணிக்க முடியாதவர்கள் எவ்வாறு மற்றவர்களின் வாழ்க்கை பற்றிய கணிப்பை, ஆயுட்காலத்தைக் கணக்கிட்டார்கள் என்பது வேடிக்கையாக உள்ளது. 1950-51இல் 38 வயதாக இருந்த சராசரி ஆயுட்காலம் 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் 65 ஆண்டுகளாக நீடித்ததற்கு, மருத்துவச் சேவையை அரசு வழங்கியதுதான் காரணம் என்பது நம் கண்களுக்குப் புலப்படுகின்ற உண்மையாகும். இந்த சராசரி ஆயுட்காலம் நீடித்தது ஜாதகத்தால் அல்ல, மருத்துவத்தால்தான் என்று அவர் குறிப்பிட்டார். சென்னையைச் சேர்ந்த பிரபல சோதிடர் ஒருவர் பலருக்கு தவறான கணிப்புகளை வழங்கி, பலரை அச்சுறுத்தி இறுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டதையும் குறிப்பிட்டு, சோதிடம் வழியாக மக்களை ஏமாற்றுவதை இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் ஒரு குற்ற நடவடிக்கையாக அரசு கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டார். திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள், ஜாதகம் எவ்வாறு அறிவியலுக்கும், பகுத்தறிவிற்கும் பொருந்தாத வகையில் உள்ளது என்பதை பல சான்றுகளுடன் விளக்கினார். குறிப்பாக, ஒரு தனியார் தொலைக்காட்சி தமிழ்நாட்டின் பிரபல சோதிடர்கள் கலந்து கொண்டு நடத்திய உரையாடலை முழுமையாக வெளியிடவில்லை என்று கூறினார். காரணம், அப்படி வெளியிட்டிருந்தால், அந்த நிகழ்வைக் கண்டு மக்கள் சோதிட நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்ற அச்சம்தான் அதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார். திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள் விமான, இரயில் விபத்துகளில் பல நூற்றுக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் இறந்து விடுகிறார்களே, அப்படி என்றால் அந்த விபத்தில் இறந்தவர்களின் ஜாதகங்கள் எல்லாம் ஒன்றா? என்ற கேள்வியை எழுப்பியபோது இந்த சோதிடர்கள், இது ‘அகஸ்மாத் மரணம்’ என்று குறிப்பிட்டனர். இது போன்று முன்னுக்குப்பின் முரணாக, அறிவியலுக்குப் புறம்பாக பேசுவதே சோதிடர்களின் வாடிக்கையாக அமைந்துவிடுகிறது. கடந்த ஒரு வாரத்தில் நாளேடுகளில் வெளிவந்த ராசி பலன்களைக் குறிப்பிட்டு, எவ்வாறு எல்லாரையும் மன நிறைவு கொள்ளச் செய்வதற்காக, எவ்வித அறிவியல் உணர்வும் இன்றி இக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன என்று நகைச்சுவையோடு குறிப்பிட்டுப் பேசினார். நிறைவாக, தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை செயலர், திரு.அசோக் வர்தன் (ஷெட்டி), இ.ஆ.ப., அவர்கள் ஒரு காட்சியுரையை வழங்கினார். புத்தர் குறிப்பிட்ட கருத்தில் தொடங்கி உலகின் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், அறிவியல் அறிஞர்களின் கருத்துகளை எல்லாம் குறிப்பிட்டு, ஜாதகப் பொய்யை விளக்கினார். கோள்களின் எண்ணிக்கை மாறி வருவதும், அதனை இந்தச் சோதிடர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், பூமியை மையமாக வைத்துக் கொண்டு மற்ற கோள்கள்தான் பூமியைச் சுற்றிவருவதாகவும் ஒரு கருத்தை தெரிவித்து, பூமியின் சுற்றியக்கத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் கணிப்பதே ஜாதகம் என்று விளக்கினார். அண்மைக்கால அறிவியல், வானியல் கண்டுபிடிப்புகளின்படி சூரியக் குடும்பத்திற்கு அப்பாலும், பல கோள்களும், பல எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் உள்ளன, இந்த அறிவியல் உண்மைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாததுதான் ஜாதகம் என்றும் குறிப்பிட்டார். கடந்த பல நூற்றாண்டுகளில் கோள்களின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு, கோள்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து 30 டிகிரி மாறி இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். இப்படி மாறிவிட்ட கோள்கள் பூமியின் உயிர்களின் மீது எவ்வகை சாதக பாதகங்களை ஏற்படுத்த முடியும்? அதை எவ்வாறு துல்லியமாகக் கணக்கிட முடியும்? என்ற வினாக்களை எழுப்பினார். சூரியனில் இருந்து பூமிக்கு ஒளிவந்து பாய்வதற்கு ஏறக்குறைய 10 நிமிடங்கள் ஆகின்றன. பல கோள்களினுடைய பாதிப்பு வருவதற்கு பல ஆண்டுகளாகின்றன. சாதாரணக் கண்களால் நாம் சூரியனைப் பார்க்கும்போது, 10 நிமிடத்திற்கு முன்பிருந்த நிலையிலிருந்த சூரியனைத்தான் நாம் பார்க்கின்றோம். ஆகவே, நிமிடத்திற்கு நிமிடம் சூரியன் இடம் பெயர்கிறது. இச்சூழலில் சோதிடத்தைக் கணக்கிடுகிறோம். அதன் பாதிப்பு உயிர்களின் மீது உள்ளது என்பதெல்லாம் பொய், மோசடி என்றும் குறிப்பிட்டார். மக்கள் அறிவியல் உணர்வை பெற்று, பகுத்தறிவாளர்களாக, சமுதாய வளர்ச்சியில் எல்லோரும் பங்கு கொள்ள வேண்டியது இன்றைய காலக்கட்டத்தின் தேவை என்றும் குறிப்பிட்டார். பொங்கல் விழா 2008 கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்பின்னர், முதல் நிகழ்விற்கான நன்றியுரையை திரு.க.செந்தில்ராஜா வழங்கினார். ஜாதக எதிர்ப்பு இயக்கத்தை மாவட்டந்தோறும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சூளுரையை அனைவரும் மேற்கொண்டனர். பகல் ஒரு மணிக்கு 750க்கும் மேற்பட்ட மாணவர்களும், இளைஞர்களும் கருத்தரங்கிற்கு வந்திருந்த பிரமுகர்களும், ஜாதகங்களைக் கிழித்து குப்பைத் தொட்டியில் எறிந்தனர்.



Posted by அதி அசுரன்
www.thozharperiyar.blogspot.co

Wednesday, May 7, 2008

பஞ்சாங்கப் பித்தலாட்டம் அம்பலம்

தமிழ் வருடப் பிறப்பு சித்திரையில் தொடங்குவதாகக் கூறிக் கொண்டு, வருடத்தின் மாத, நாள்களோடு மட்டுமின்றி நாழிகை, நல்ல நேரம், கெட்ட நேரம், சகுனம், ராகுகாலம் என்ற மூட நம்பிக்கைகளையும் சேர்த்து - ‘பஞ்சாங்கம்’ தயாரிக்கப்படுகிறது. இந்துக்களின் காலண்டராக, பழமைவாதிகளால் கூறப்படும் பஞ்சாங்கத்தை பல்வேறு சோதிடர்கள் வெளியிட்டு வருகிறார்கள். தமிழக அரசு தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்த நிலையில், இந்துக் கோயில் இந்த ஆண்டும் சித்திரையிலேயே தமிழ்ப் புத்தாண்டு என்று கூறிக் கொண்டு, விசேட பூசைகளை அறிவித்து வருகின்றன. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்து அறநிலையத் துறையின் கீழ் வரும் கோயில் நிர்வாகம்கூட தமிழக அரசின் முடிவுக்கு மாறாக சித்திரையை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்துள்ளன.

அந்தக் காலத்திலேயே இந்து மதத்தின் முன்னோர்கள் - வானவியலைக் கணித்து, நாட்காட்டியை உருவாக்கியுள்ளதாக பழம் பெருமையை, பார்ப்பனர்களும் இந்துப் பழமைவாதிகளும் பீற்றிக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த இந்து காலண்டரின் ஓட்டைகள் அம்பலத்துக்கு வந்துள்ளன.

கையில் கட்டியுள்ள கடிகாரம், காலை 8 மணியை காட்டுவதற்கு பதிலாக - இரவு 12 மணியை தொடர்ந்து காட்டிக் கொண்டிருந்தால் அதை நாம் கையில் கட்டிக் கொண்டு, இதுதான் சரியான நேரம் என்று ஊரில் கூறிக் கொண்டிருந்தால் - ஊர் மக்கள் என்ன சொல்வார்கள்? பைத்தியம் பிடித்து விட்டதா என்று கேட்பார்கள். எனது கடிகாரத்தின் நேரம் இரவு 12 மணி தான் என்று காலை 8 மணிக்கு ஒருவன் கூறிக் கொண்டே இருப்பதைப் போல்தான் இந்து காலண்டரான பஞ்சாங்கத்தின் கதையும் இருக்கிறது.

இந்து சோதிடர்களின் விஞ்ஞான அடிப்படையில்லாத தவறான கணிப்புகளால் ஊகத்தால் உருவாக்கப்பட்ட வானவியல் அடிப்படைகள். மிக மோசமான நேரத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. பருவ காலங்களை வேகம் வேகமாக - கடந்த 60 ஆண்டுகளில் பாய்ச்சல் வேகத்தில் கடந்து போய் விட்டது. ‘இந்து’க்கள் கணித்த நேரம், இதன் விளைவாக - இப்போது 24 நாட்கள் இடைவெளியில் இந்து காலண்டரான பஞ்சாங்கம், தேங்கிப் போய் நிற்கிறது. அதாவது உலகம் முழுதும் ஆகஸ்டு 1 ஆம் தேதி என்றால், இப்போது, பஞ்சாங்கப்படி, ஆகஸ்டு 25 அய் காட்டிக் கொண்டு நிற்கிறது. இந்த பஞ்சாங்கம் - சரியான வழிகாட்டியல்ல என்பதால் 1955 ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்தபோது, இந்திய அரசு மேக்னக் ஷா என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியின் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

இந்து பஞ்சாங்க காலண்டரை விரிவாக ஆராய்ந்த குழு, தனது அறிக்கையில் “இந்து காலண்டர் என்பது - மனிதர்கள் தங்கள் சிந்தனையின் கற்பனையில் உருவாக்கப்பட்டதால், அதில் ஏராளமான மூடநம்பிக்கைகளையும், அரை உண்மைகளையும் இடைக்காலத்தில் இணைத்துவிட்டார்கள். இதில் பல குளறுபடிகளும், குழப்பங்களும் உள்ளன. இந்தக் குறைகளை துணிவோடு எடுத்துக்காட்டி மாற்றங்களைக் கொண்டுவர - எவருக்கும் துணிவில்லை. 23 நாட்கள் இடைவெளியில் இந்து பஞ்சாங்கம் போய்க் கொண்டிருக்கிறது. கடந்த 1400 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட கால இடைவெளி நீண்டு 23 நாட்களாக வந்து நிற்கிறது” என்று கமிட்டி தனது பரிந்துரையில் சுட்டிக் காட்டியதுடன், “தவறுகளும் - மூடநம்பிக்கைகளும் நிறைந்த ‘களஞ்சியத்தை’ நாம் இந்து வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டு வாழப் பயிற்றுவிக்கப்பட்டு விட்டதால், அதை மாற்ற முடியாத புனிதமாக்கி - பாதுகாத்து வருகிறோம்” என்றும் சுட்டிக்காட்டியது. விஞ்ஞானிகள் குழு - புதிய தேசிய காலண்டர் முறையையும் உருவாக்கியது. ஆனால் - பார்ப்பனர்களும், பழமைவாதிகளும், சோதிடர்களும், இந்த மாற்றத்தை ஏற்காமல், கிடப்பில் போட்டுவிட்டனர்.

உண்மையில் சூரியன் உச்சிக்கு வரும் நாளான - தமிழர் திருநாள் - பொங்கல் நாள் என்று கொண்டாடப்படும் நாள் டிசம்பர் 22 ஆம் தேதியே ஆகும். ஆனால், தவறான கணிப்புகளால் அது ஜனவரி 14 அல்லது 15 ஆம் தேதிக்கு தள்ளப்பட்டுவிட்டது. 1955 இல் 23 நாட்களாக இருந்து, இப்போது 24 நாட்கள் அதிகரித்துள்ள தவறான இடைவெளியில்தான் நாள், நட்சத்திரம், நல்ல நேரம், எதிர்காலம் எல்லாமுமே கணிக்கப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையிலே சோதிட “மேதைகள்” பத்திரிகைகளில் சோதிடக் கணிப்புகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் படித்தவர்கள் முதல் பாமரர் வரை படித்து நம்பிக் கொண்டிருக்கிறார்கள்! வெட்கக் கேட்டைப் பார்த்தீர்களா?

(ஆதாரம்: ‘பிரன்ட் லைன்’ இதழில் (மார்ச் 20) பீமன் நாத் என்ற வானவியல் விஞ்ஞானி எழுதிய கட்டுரை)
நன்றி...புரட்சிப்பெரியார் முழக்கம் ஏப்பிரல் 2008
visit www.puratchiperiyarmuzhakkam.com

Thursday, May 1, 2008

பஞ்சாங்கம் பார்ப்போமா ?- அறிவியல் அடிப்படையில் !

(1) கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க விடவில்லை என்று பக்கம் பக்கமாக எழுதுகின்றார்கள். இணைய தளங்களிலே புலம்பித் தீர்க்கின்றார்கள். தினமணி நாளிதழுக்கு தகுந்த பதிலடி கொடுத்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பஞ்சாங்கம் பலவகை என்பதை எடுத்துக் காட்டி இருந்தார்கள். பஞ்சாங்கம் என்றால் என்ன வென்று பார்ப்போம்.

3 வகையான பஞ்சாங்கங்கள் இருக்கின்றன. வாக்கியப் பஞ்சாங்கம் வேறு- திருக்கணிதப் பஞ்சாங்கம் வேறு எபிமெரிக் பஞ்சாங்கம் வேறு. அவர்களே சொல்கின் றார்கள் பாருங்கள்" திருக் கணிதம் கி.பி. 14-ஆம் நூற் றாண்டிற்குப் பிறகு ஏற்படுத் தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ...தோராய கணிதங்களுடன் கோள்களின் அசைவைக் கணக்கிட்டு ஏற் படுத்தப்பட்டது வாக்ய முறைக் கணிதமாகும் . சில துல்லியமான கணித அமைப்புடன் கோள்களின் அசைவைக் கணக்கிட்டு ஏற்படுத்தப்பட்டது திருக்கணித மாகும் .

இரண்டு பஞ்சாங்கத்தில் உள்ள கோள்களின் அசைவுகள் ஒன்றுபோல் இருப்பது இல்லை. வாக்ய கணித முறையில் தயாரிக்கப் படும் அனைத்து விபரங்களும் திருக்கணித முறையுடன் இணைந்து செல்வதில்லை. ஆதலால் கோள்களின் மாற்றத்திலும் திசையின் இருப்பிலும் அதிகமான வித்தியாச அமைப்பு ஏற்படும். ஒரு பொழுதும் நவாம்சச் சக்கரம் இரண்டு கணித அமைப்பிற்கும் ஒன்று போல் இருப்ப தில்லை. இவ்வாறு இரண்டு பஞ்சாங்க நிலையும் வேறு பட்டு இருப்பது போல் எபிமெரிஸ் என்று சொல்லப் படுகிற பஞ்சாங்கங்களும் வேறுபட்டுள்ளது.

" ஒருவர் சொல்கின்றார். வாக்ய பஞ்சாங்கம் என்பது முழுக்க முழுக்க ஸ்லோகங்கள் அடிப்படையில் உருவாக் கப்பட்டது . அதிலே சில தவறுகள் இருந்தன. அதைத் திருத்தி திருக்கணித பஞ்சாங்கத்தை உருவாக்கினர் .திருத்தப்பட்ட பஞ்சாங்கம் அதனால்தான் திருக்கணித பஞ்சாங்கம் என்கின்றார். ஜாதகம் கணிப்பதற்கு அடிப்படையே பஞ்சாங்கம் தான். பஞ்சாங்கம் பார்த்து தான் கோள்களின் இருப்பு, நட்சத்திரம் போன்றவை சொல்கின்றார்கள். புதிதாக ஜாதகம் கணிக்க பழகுபவர்கள் நான் எந்த பஞ்சாங்கம் அடிப்படையில் ஜாதகம் கணிக்க எனக் கேட்டால் 3 வகையிலும் பழகுங்குகள், அனுபவத்தின் அடிப்படையில் எது சரியாக வருகின்றது எனப் பார்த்து அந்த முறையில் கணித்துக் கொள்ளுங்கள் என்கின்றார்கள் .

பஞ்சாங்கம் படிக்க விடவில்லை என்று குதியாய் குதிப்பவர்கள் எந்தப் பஞ்சாங்கம் சரியான பஞ்சாங்கம் என்று சொல்ல முன் வருவார்களா ?

பஞ்சாங்கம் மடத்தின் அடிப்படையில் பலவிதம் . . சிறீரெங்கம் பஞ்சாங்கம் , சிருங்கேரி மடம் பஞ்சாங்கம். சுத்த திருக்கணித பஞ்சாங்கம், ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம் , திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் ,பாம்பு பஞ்சாங்கம், யோக சேம பஞ் சாங்கம் இப்படி பலவிதமான பஞ்சாங்கங்கள். ஒவ்வொன்றுக்கும் வேறுபாடுகள் . எந்தப் பஞ்சாங்கம் இந்து மத பஞ் சாங்கம் - சொல்வார்களா?

பஞ்சாங்கம் மொழி அடிப் படையில் பலவிதம். தமிழ் பஞ்சாங்கம், தெலுங்கு பஞ்சாங்கம், பெங்காலி பஞ்சாங்கம், குஜராத் பஞ்சாங்கம் , மராத்தி பஞ்சாங்கம், ஹிந்தி பஞ்சாங்கம் .. ஒவ்வொரு மொழிக்கும் புத்தாண்டு தினம் வெவ்வேறு- அதனால் அதனோடு தொடர்பு படுத்தி சொல்லப் படும் பஞ்சாங்கம் வெவ்வேறு.இதில் எந்த மொழிப் பஞ்சாங்கம் இந்து மதப் பஞ்சாங்கம் - சொல் வார்களா?

பஞ்சாங்கத்தில் சொல்லப் படும் வார்த்தைகள் பெரும் பாலும் சமஸ்கிருதத்தில். பெரிய பெரிய வாக்கியங்கள் - சில வாக்கியங்கள் 13 வரி , 15 வரி என. 19ம் நூற்றாண்டுத் தமிழ் நடையில் எழுதப்பட்டவை. ஏதோ தமிழர்கள் உட்கார்ந்து மொழியும் புரியாமல் அர்த்தமும் தெரியாமல் கர்நாடக சங்கீதம் கேட் பது போல் கேட்க முடியுமே தவிர என்ன சொல்கின்றார் கள், என்ன அர்த்தம் என்பதை முழுவதுமாக உணரமுடியுமா? "பொய்யிலே முக்காற்படி, புரட்டிலே காற்படி, வையகம் ஏமாறும்படி வைத்துள்ள நூற்களை ஒப்புவதெப்படி" என்றார் புரட்சிக் கவிஞர்.

பஞ்சாங்க நூல்கள் அப்படிப் பட்டவைதான் . பஞ்ச+ அங்கம் (5 உறுப்புகள்) = பஞ்சாங்கம் என்கின்றார்கள். 5 உறுப்புகள் எவை என்றால் 1. திதி 2. வாரம் 3. நட்சத்திரம் 4. யோகம் 5. கரணம் என்கின்றனர் . நிலையாக இருக்கும் விண்மீன் கூட்டங்களையும்,சூரியன் நகர்ந்து செல்வதாகக் நினைத்து இரண்டையும் இணைத்து ராசி என்பதை வெளிநாட்டினர் ஏற்படுத் தினர். இது சூரியனை மையமாகக் கொண்ட ஜோடியாக் பாதை ஆகும். வேத ஜோதி டத்தில் சந்திரனை மையமாக வைத்து ராசிகளையும் நட் சத்திரங்களையும் குறித்தனர். இரண்டுமே கற்பனைப் பாதைகள். ஒரு எடுத்துக்காட்டிற்காகப் பார்த்தால், நெல்லை முதல் சென்னை வரை செல்லும் ரெயில் விரைவு வண்டிப்பாதையை சூரியனை மையமாகக் கொண்ட ஜோடியாக் பாதை என வைத்துக் கொள்வோம். 12+27 இடங்களில் பேருந்து நெல்லை முதல் சென்னை எழும்பூர் வரை நிற்பதாகக் கொள்ளுங்கள் . வெள்ளைக் காரன் ஏற்படுத்திய அதே 12 ராசிகளை சந்திரன் அடிப் படையில் ஏற்படுத்திக் கொண்டு, 27 நட்சத்திரங் களையும் ஏற்படுத்தியிருக்கின் றார்கள். இப்போது திதி என்றால் சந்திரன் செல்லும் கற்பனை ஜோடியாக் பாதையில் சந் திரன் நிலைக்கும் , சூரியன் செல்லும் கற்பனை ஜோடி யாக் பாதையில் சூரியன் நிலைக்கும் ஏற்படும் தூரத் தின் அளவு என்கின்றார்கள் .அதாவது சந்திரன் பாதை - சூரியனின் பாதை . நமது எடுத்துக்காட்டின்படி பேருந்து பாதை - ரயில் பாதை. இந்த கற்பனை தூரம் 360 பாகைகள் கொண்ட வட்டம் . 360 பாகையை ராசி கள் 12 ஆல் வகுத்து ஒவ் வொரு ராசிக்கும் 30 பாகை என ராசிக்கு சொன்னார்கள். இப்போது திதி 30 என வைத் துக்கொண்டு 360 பாகையை 30 ஆல் வகுத்து ஒவ்வொரு திதிக்கும் 12 பாகை எனச் சொல்லியிருக்கின்றார்கள். மாதந்தோறும் எல்லா நாட்டிலும் அமாவாசை பவுர்ணமி வருகின்றது. ஆனால் நமது நாட்டில் அமாவாசைக் கும் அடுத்த அமாவாசைக்கும் இடைப்பட்ட 30 நாளை 30 திதிகளாகப் பஞ்சாங்கத்தின் படி பிரித்திருக்கின்றார்கள். சந்திரன் என்பது துணைக் கோள். பூமியைச் சுற்றி வருகின்றது . தன்னைத் தானே சந்திரன் பூமியைப் போல் சுற்றிக் கொள்வதில்லை. பூமி யைச் சுற்றி வரும் சந்திரனின் ஒரு பகுதி பூமிக்குத் தெரிகின்றது. சூரியனின் ஒளி பூமியில் படுவது போல சந்திரனிலும் படுகின்றது. சந்திரனில் படும் சூரிய ஒளி பூமிக்குத் தெரிகின்றது. பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியின் விளைவாக சந்திரன் மறைவது போலவும், மீண்டும் தோன் றுவது போலவும் தோன்று கின்றது என்பது அறிவியல். அப்படித்தான் அமாவாசையும் பவுர்ணமியும் ஏற்படு கின்றது. பஞ்சாங்கத்தில் என்ன சொல்லியிருக்கின்றார்கள் என்றால் வளர்பிறை(சுக்ல பட்சம்) , தேய்பிறை(கிருஷ்ண பட்சம்) என்று பிரித்திருக்கின்றார்கள். பிரித்தது மட்டுமல்ல, நல்ல காரியங்களை வளர் பிறையில்தான் செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்து விட்டார்கள். இது மட்டுமல்ல பிரதிமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, அமாவசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் எதுவும் செய்யக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடப்ப தற்கும் அமாவாசை அல்லது பௌர்ணமி முடிந்து 1வது நாள் என்பதற்கும் என்ன சம்பந்தம் ? அல்லது அதி லிருந்து 4வது நாள், 8-வது நாள், 9வது நாள், 14வது நாள் என்பதற்கும் என்ன சம்பந்தம்- .எப்படி விஞ்ஞானம்? பஞ் சாங்கம் ஏன் இந்த நாள்களில் நல்ல காரியங்கள் செய்யாதே என்கின்றது? .யார் தீர்மானித் தார்கள்? எப்படி தீர்மானித் தார்கள்? எதற்காக மாதத்தின் மூன்றில் ஒரு பாக நாளில் ஒன்றும் செய்யாதே எனத் தடுத்தார்கள் ? ஒரு பக்கம் ஜோதிடம் அறிவியல் எனச் சொல்லி விட்டு அறிவுக்கு ஒவ்வாத விசயங்களை நம்ப வைக்கத்தான் பஞ்சாங்கம்.

. பஞ்சாங்கம் பார்ப்பது என்பதை மனதளவில் தமிழர் களுக்கு ஊட்டி வைத்துள் ளார்கள். புது கார் வாங்க வேண்டுமா?,புது வீடு வாங்க வேண்டுமா? திருமணம் முடிக்க வேண்டுமா? வேலைக்கு மனுப் போட வேண்டுமா? வெளியூருக்குப் போக வேண்டுமா ? புதிதாகத் தொழில் தொடங்க வேண்டுமா? எல்லாவற்றிக்கும் பஞ்சாங்கத்தைப் பார்த்து விட்டு கிளம்பு எனப் பழக்கப் படுத்தி வைத்துள்ளனர். கிழியட்டும் பழம்பஞ்சாங்கம் என்றார் புரட்சிக் கவிஞர். விஞ்ஞான முன்னேற்றத்தால் , பகுத்தறிவு வீச்சால் கிழிகின்ற பஞ்சாங்கங்களைப் பார்த்து மனம் பதறுகின்றனர் மதவாதிகள்.

-------------வா.நேரு

please visit www.pagutharivaalarkazhakam.blogspot.com